பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிங்கம் ஒன்று இரைதனைத்
தேடித் திரியும் வேளையில்
அங்கே வழியில் ஒருமுயல்
அயர்ந்து துரங்கக் கண்டது.

“இந்த முயலைக் கொல்லுவோம்”
என்று சிங்கம் செல்கையில்,
அந்த வழியில் வந்தஓர்
அழகு மானைக் கண்டது.

“துள்ளி ஓடும் மானைநாம்”
துரத்திக் கொல்வோம் முதலிலே,
மெள்ள வந்து, துங்கிடும்
முயலைப் பிறகு தின்னலாம்”

சிங்கம் இதனை எண்ணியே
‘திடுதி’டென்று ஒடியே,
அங்கு வந்த மானையே
அடித்துக் கொல்லச் சென்றது.

15