பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரபு ஒருவர் தம் ஊரில் பெரிய கொட்டகை கட்டிஅதில் இரவில் காட்சிகள் கடத்திடவே ஏற்பா டெல்லாம் செய்தனரே. அற்புத மான வித்தைகளே அங்கே காட்டிடும் அனைவர்க்கும் பற்பல பொருளை அப்பிரபு பரிசாய்க் கொடுத்தனர் கித்தமுமே. கட்டணம் எதுவும் வாங்காமல் காட்சிக ளெல்லாம் காட்டியதால், கொட்டகை கிறைய மக்களுமே கூடினர் தினமும் இரவினிலே, (s 卤 参 දෘ ෆ්‍ර ధో {j ஒருநாள் மேடையில் கோமாளி ஒருவன் வங்து கின்றனனே. அரிய பெரிய வித்தையெலாம் அடியேன் செய்வேன் ; கண்டிடுவீர். பன்றி போலக் கத்திடுவேன்; பார்த்தே அதிசயம் அடைவீர்கள்' என்றே கூறிக் குனிந்தனனே ; ஈேக் பீக் ஈக் எனக் கத்தினனே. 21 2994–2