பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பளிங்குக் கோலிக் குண்டு போலப் பளபளக்கும் திராட்சைகள் பழுத்துக் குலுங்கும் தோட்டம் தன்னைப் பார்த்து நரிகள் சென்றன. அந்தத் தோட்டம் தன்னில் சென்று அட்ட காசம் செய்கையில், வந்து சேர்ந்தார் தோட்டம் வைத்து வளர்த்த மனிதர் அவ்விடம். மெத்த கோபம் கொண்டு அவற்றை விரட்டிப் பிடிக்க முயன்றனர். எத்தி விட்டு நரிகள் யாவும் இங்கு மங்கும் ஓடின. 27