பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கலைமான் ஒன்று காட்டினிலே,
கடுமை யான வெய்யிலிலே,
அலைந்து சுற்றித் திரிந்ததுவே;
அதிகத் தாகம் கொண்டதுவே.

அருகில் இருந்த ஓடைதனை
அடைந்தது, தண்ணீர் அருந்திடவே
உருவம் நீரில் தெரிந்திடவே,
உற்றே அதனைப் பார்த்ததுவே.

தண்ணீர் தன்னில் அழகுடைய
தனது கொம்புகள் தெரிந்திடவே,
"என்னே அழகு, ஆஹாஹா!
எனது கொம்புகள்!" என்றதுவே.

கொண்டது பெருமை; அப்பொழுதே
கோபம் வந்தது கால்களின்மேல்.
கண்டவர் இகழ அழகின்றிக்
கால்கள் நான்கும் உள்ளனவே!

ஈசன் தந்தான் அழகுடைய
இரண்டு கொம்புகள். ஆயினுமே,
மோச மான கால்களினால் -
மிகவும் கேவலம் ஆகிறதே!'
3?