பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் கருமி சிறுபொழுது அயர்ந்திடக் குருவி பாய்ந்தோடி வங்தொரு காசைத் துரக்கியது; வைத்தது அங்கொரு பொங்தினிலே. கண்டனர் கருமி; பற்களையே கடித்தனர்; கோபம் மிகமிகவே கொண்டனர். சிட்டே, உன்செயலால் கொஞ்சமும் உனக்குப் பயனுண்டோ? திருடிய காசைத் தின்பாயோ? செலவிடும் வழிதான் தெரிந்திடுமோ? திருகியே கொல்வேன் உன்கழுத்தை. சீச்சீ, காசைக கொடு' என்ருர், "ஐயா, உலகம் அறிந்தவரே! அறிவுரை கூறும் பெரியவரே! மெய்யைச் சிறிதும் உணராமல் வீணுய்க் கோபம் கொள்ளுவதேன்? தேவையும் பயனும் தெரியாமல் திருடினேன். எனவே கூறுகிறீர். தேவையும் பயனும் தெரிந்தும்நீர் செய்திடும் வேலை தெரியாதோ? 42