பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதர் இருவர் தலைகளும் மறைந்த வுடனே, வேகமாய்க் குனிந்த முதுகுக் குரங்குமே குதித்தே ஒடி வந்தது; கரையில் கிடந்த வலைதனைக் கையில் எடுத்துக் கொண்டது; விரைவில் குளத்தில் குதித்தது; வீசி வலையை விரித்தது. வலையில் மீன்கள் எதுவுமே வந்து சிக்கு முன்னரே, தலையும் காலும் சிக்கியே தவித்த தந்தக் குரங்குமே! தகுந்த உதவி இல்லையே! தப்ப வழியும் இல்லையே! மிகுந்த முயற்சி செய்தது ; வீண்தான் என்றே அறிந்தது: குளத்தில் வலையை விரிக்கவும், குதிக்கும் மீனைப் பிடிக்கவும் பழக்க மில்லா என்னையே பாழும் ஆசை கெடுத்ததே! மங்தி யாகப் பிறந்தநான் மனித கை கடித்ததால், இந்தக் குளத்தில் சாகிறேன். இது என் மடமை' என்றது. 47