பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டப் பகலில் சுட்டுப் பொசுக்கும்

வெய்யில் தன்னிலே
பாதித் துாரம் சென்ற வணிகன்
களைத்துப் போயினன்.

வெட்ட வெளியில் தங்கு தற்கு

நிழலில் லாததால்
வேறே என்ன செய்வ தென்றே
எண்ணிப் பார்த்தனன்.


கழுதை தன்னை அவ்வி டத்தே

நிறுத்தச் சொல்லினன்,
களைப்புத் தீரக் கழுதை கிழலில்
அமர லாயினன்.

கழுதைக் கார முனியன் இதனைக்

கண்டு கோபமாய்க்
கண்டிப் பான குரலில் உடனே
கூற லாயினன்:


வாட கைக்குக் கழுதை ஒன்றை

மட்டுமே தங்தேன்.
வாட்ட சாட்ட மாக இதனின்
நிழலில் அமர்வதேன்?

கூட வேஇக் கழுதை நிழலைச்

சேர்த்தோ பேசினீர்?
கொடுக்க வேண்டும் கிழலுக் காகத்
தனியே வாடகை”

52