பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறகு வெட்டி மரத்தினை வெட்டிக் கொண்டே இருக்தனன். அருகில் சிங்கம் வந்தது; அவனைப் பார்த்து விட்டது : சிங்கம் அருகில் வருவது தெரிந்த வுடனே அவனுமே அங்கி ருந்து வேகமாய் அலறிக் கொண்டே ஓடினன். சிங்கம் அவனைத் தொடர்ந்துமே சென்று பிடித்து விட்டது ! எங்கே ஒடப் பார்க்கிருய்?" என்று மிரட்டிக் கேட்டது. மிருக ராஜ சிங்கமே, மிகவும் கெஞ்சிக் கேட்கிறேன்; இரக்கம் காட்டி விட்டிடு’ என்றே அவனும் வேண்டினன். உன்னே விட்டு விடுகிறேன். ஒன்று மட்டும் செய்திடு. இன்றே உனது மகளை நீ எனக்கு மணந்து கொடுத்திடு.” 52