பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணைப் பறித்திடும் வண்ணத் தோகைதனேக் காட்டி மயில்முன்னுல் ஆடிவந்தே, என்னையே நீங்களும் தேர்ந்தெடுத் தால்மிக்க இன்பம் அடையலாம்' என்றதுவே. தோகையைக் காட்டிப் பசப்பும் மயிலதன் தோற்றம் சபையைக் கவர்ந்ததுவாம். ஆகையால், அந்த மயிலினுக் கேசபை அரசர் பதவி அளித்ததுவாம். பறவை அரசன் மயிலினை வாழ்த்தியே பலத்த குரல்கள் எழும்புகையில், குருவி ஒன்றுமுன்னுல் வந்துகின்று கானும் கூறிடும் வார்த்தையைக் கேட்டிடுவீர். கருத்துடன் கம்மவர் உயிரையெல்லாம் என்றும் காத்திடல் அரசரின் கடமையன்ருே ? பருந்தும், கழுகும், வல்லுாறுகளும் கம்மைப் படுத்திடும் பாட்டுக்கும் எல்லையுண்டோ ? அந்தப் பறவைகள் செய்யும் கொடுமைகள் அனைத்தும் அடக்கிட வேண்டுமென்ருல், இந்த மயிலால் முடிந்திடு மோ? இதை எண்ணிப்பார்த் தீர்களோ ?’ என்றதுவே. சிந்தனை செய்தன. பறவையெல்லாம். உடன் தேர்தலை ரத்துமே செய்தனவே.

இந்த மயிலின் பகட்டில் மயங்கி

இழந்தோம் மதியினை என்றனவே! 76