பக்கம்:ஈச்சம்பாய்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

151



அவளைப் பார்த்துவிட்டுப் போன மாப்பிள்ளையைப் பற்றியோ எழுந்த விமர்சனமல்ல என்பதைப் புரிந்து கொண்டார். அவரது இன்றைய நிலையைப் பற்றிய விமர்சனம். மனைவியின் அந்த ஒற்றை வார்த்தை விமர்சனம், அவரை, பிரம்பு நாற்காலியில் சாய்வாக உட்கார வைத்தது. ஓராயிரம் நடப்புக்களை கட்டிக் காட்டியதோடு, அவரையும் சுட்டது.

பழனிச்சாமிக்கு, அரசுப் பணியின் பழைய பொறுப்பையும், இப்போது கமத்தப்பட்டிருக்கும் புதிய பொறுப்பையும் அந்த விமர்சனம் நினைவுபடுத்தியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் தமிழக அரசில் முக்கியத் துறை ஒன்றிற்கு செயலாளராக இருந்தபோது, புனிதாவைப் பெண் பார்க்க வந்தார்கள். சப்-கலெக்டர் மாப்பிள்ளை. இவரைப் போலவே எடுத்த எடுப்பிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனவன். ஆரம்பத்தில் இவரிடம் அண்டர் செகரட்டரியாகவும் வேலை பார்த்தவன். பெற்றோர் உற்றோரோடு வந்தான். இன்னும் பதிலளிக்கவில்லை, கல்யாணத்தைப் பொறுத்த அளவில் மௌனம் சம்மதத்தின் அடையாளமல்ல என்பது அவருக்குப் புரிந்தது. மனைவியின் 'தெரிஞ்சதுதானே' தெரியவேண்டிய அளவிற்குமேல் தெரியவைத்தது. இ.ஆ.ப. வான இவர் ஐம்பத்தெட்டைக் கடந்தாலும், அரக, பதவி நீடிப்பு கொடுப்பதாக ஒரு பேச்சு அடிபட்டது. அந்தப் பின்னணியில் தான் அவர்கள் பெண்பார்க்க வந்திருக்க வேண்டும். ஆனாலும் இவர் மறு வாரமே ஓய்வு பெற்றுவிட்டார். சும்மா சொல்லக் கூடாது. அரக, இவருக்கு நீட்டிப்பு கொடுக்க முன் வந்தது. கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் கரை படியாதவர் என்று பெயர் எடுத்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/153&oldid=1371881" இலிருந்து மீள்விக்கப்பட்டது