பக்கம்:ஈச்சம்பாய்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஈச்சம்பாய்


மொத்தம் இருபது பறவைகள். ஆண் குருவிகள் பெண் குருவிகளை இடித்துக் கொண்டன. இவற்றின் இடிபாடு பிடிக்காததுபோல், பெண் குருவிகள் பறந்து எதிர்த் திசையில் அமர்ந்துகொண்டு அவற்றை முறைத்தன. சிறிது நேரத்தில், அப்படியே அமர்ந்திருந்த அந்த ஆண் குருவிகளும் பெண் குருவிகளும், மரங்களை விட்டுத் தாவி ஆகாயத்தில் சஞ்சரித்தன. மேலும் கீழுமாகப் பறந்தன.

இவற்றைச் சட்டை செய்யாதது போல், சட்டையில்லாமல் பிரிண்ட் போட்ட பனியனோடும் சுருட்டை முடியோடும் அழகுத் தோற்றத்தோடும் அங்கே வந்து நின்ற அந்த வாலிபன், சற்றுத் தொலைவில் வந்தவளைத் திரும்பிப் பார்த்தான். அவளோ தயங்கித் தயங்கி நடந்து வந்தாள். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் அங்கேயே நின்றாள். இங்கே நின்ற அவன், அவளை ‘வா வா’ என்று கைகளை வளைத்து வளைத்துக் காட்டினான். அவள் வேண்டா வெறுப்பாக வருகிறவள் போல் வந்து, அவனுக்கு ‘எட்டடி’ தொலைவில் நின்றாள். காக்கா நிறக் கண்கள்; பூஞ்சிட்டுக் குருவி நிறம்: மைனா போன்ற பேதமைச் சாயல், அவனுக்குக் காதளவு உயரம். வோட்டுப்போடும் வயதிற்கு வந்திருக்கமாட்டாள். அவளையே ரசித்துக் கொண்டிருந்த வாலிபன் திடீரென்று ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டான். அவள் பயத்தால் கைகளை உதறினாள். அவன் தைரியப்படுத்துபவன் போல் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

இந்த மனித ஜோடியை ஆகாயத்தில் வட்டமடித்தபடியே பார்த்த தூக்கணாங் குருவிகள், மெல்ல மெல்லக் கீழே இறங்கி உடைமரத்தில் அமரந்து கொண்டன. காதலர் இருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/20&oldid=1495611" இலிருந்து மீள்விக்கப்பட்டது