பக்கம்:ஈச்சம்பாய்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஈச்சம்பாய்


வெளிறிப் போயிருந்த மஞ்சள் பிரகாசி, எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த குருவியாளையும், போகிற மானிடப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தது. நடந்ததை அதனால் நம்ப முடியவில்லை. கூட்டுக்கு வந்த குருவியாள் எல்லாவற்றையும் பார்த்தாள். கீழே தளம் போட்டதுபோல் இருந்த களிமண்ணைப் பார்த்தது. வெளிச்சத்திற்காக ஒட்டி வைக்கப்பட்டிருந்த மின்மினிப் பூச்சிகளையும் பார்த்தது. பக்கவாட்டில் திரைச்சீலை போல் வைக்கப்பட்டிருந்த பசும்புல் தழைகளையும், மஞ்சள் பிரகாசியே கூட்டுக்குள் உருண்டு ஏற்படுத்திய 'படுக்கை' அறையையும் பார்த்தது. எதற்காகவோ குருவியாள் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு மஞ்சள் பிரகாசியை அலட்சியமாக இடித்தபடி கூட்டுக்கு வெளியே வந்து, மீண்டும் பழைய இடத்தில் உட்கார்ந்தது.

மஞ்சள் பிரகாசி காதல் தோல்வியால் கூட்டுக்குள்ளேயே கூனிக் குறுகிக் கிடந்தது. பிறகு அதுவும் கூட்டுக்கு வெளியே வந்தது. இன்னொரு கூட்டில் ஆண் குருவியுடன் 'லாலி' பாட நுழையப்போன வேறொரு பெண் குருவி, மஞ்சள் பிரகாசியின் கூட்டருகே வந்து, ‘வா போகலாம்’ என்பது போல் அதைப்பார்த்தது. ‘நீ... ஒரு 'சின்ன வீடு’ தந்தால்கடப் போதும் என்பதுபோல் அதனை நோக்கியது. ஆனால் மஞ்சள் பிரகாசிக்கு அதன் போக்கும் நோக்கும் பிடிக்கவில்லை. ‘சீ போ’ என்பதுபோல முறைத்துவிட்டு, பிறகு குருவி நாகரிகத்தைக் கருதி, அதுவே வேறொரு கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது.

அந்தப் பெண் குருவி போனதும், மஞ்சள் பிரகாசி மீண்டும் கூட்டருகே வந்தது. இன்னும் எந்தக் கூட்டுக்குள்ளும் போகாமல் இருக்கும் குருவியாளையே பரிதாபமாகப் பார்த்தது. அதுவோ, அலட்சியத்தில் மஞ்சள் பிரகாசியைப் பார்த்தது. மஞ்சள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/26&oldid=1495617" இலிருந்து மீள்விக்கப்பட்டது