பக்கம்:ஈச்சம்பாய்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒரு சபதத்தின்
மறுபக்கம்

அந்த மூன்றுகட்டு, பழம்பெரும் வீட்டில் நவீனமான மேக்கப் போடப்பட்ட முதற்கட்டின் தெருப்படிகளில் கால் மிதிக்க, தயங்கி நின்றான் மாரிமுத்து... அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் பின்னால் வந்த சொந்த நாய் கூட அவனை ஒரு மாதிரி பார்ப்பதுபோல் இருந்தது. உடனே அவன் கீழே குனிந்து கல்லை எடுப்பதுபோல் பாசாங்கு செய்தபோது, அவன்மீது நம்பிக்கை வைத்ததுபோல், அது வாலாட்டி நின்றது. உடனே இவன் கல்லுக்குப் பதிலாக ஒரு மண்கட்டியைத் தூக்கி எறிந்தபோது அது செல்லக் கோபத்தோடு பின்வாங்கியது.

மாரிமுத்து, அந்தப்படிகளை மிதிக்கலாமா, வேண்டாமா என்று ஒரு நிமிடம் சிந்தித்தான். இருபதாண்டு காலமாக அந்த வீட்டுப் படியை மிதிப்பதில்லை என்று போட்டிருந்த சபதம்... அவன் தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டான்... சபதம் முக்கியமல்ல.. அதன் நோக்கம்தான் முக்கியம்... அந்த ஊரிலேயே கால் பகுதியை மடக்கிப் போட்டிருக்கும் இந்த அரண்மனை வீட்டிற்கு உறவாடுவதற்கோ யாசகம் கேட்டோ படி மிதிப்பதில்லை என்றுதான் சபதம்.. இந்த சபதத்தால் தன்னைத் தோளில் தூக்கி கொஞ்சிய தாய்மாமன் செத்த போதுகூட இந்த வீட்டுப் படியேறியதில்லை.... கடுகாட்டுக்குப் பக்கத்திலுள்ள கருவேலமரக்காட்டில் தாய் மாமா எரிந்து முடிவதுவரைக்கும் ஒரு கௌரவ வெட்டியானாக காத்து நின்றவன். ஆனால் அப்பேற்பட்டவன் படிமிதிக்கப் போகிறான். ஆனாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/44&oldid=1371925" இலிருந்து மீள்விக்கப்பட்டது