பக்கம்:ஈச்சம்பாய்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஈச்சம்பாய்



அதையும் பாத்துடலாம்... டேய் முத்துவேலு எந்திரிடா..

தேவையில்லாம இதைக் கௌரவப் பிரச்சனையாக்கிட்டே.-- எனக்கும் சுயமரியாதை இருக்கு... என்னால வரமுடியாது....ஒன்னால..

முத்துவேல் சொல்லி முடிக்கும் முன்பே, மாரிமுத்து ஆவேசமாய்ப் பாய்ந்து முத்துவேல் கையைப் பிடித்து, ஊஞ்சலில் இருந்து இழுத்துக் கீழே போட்டான்...

கீழே விழுந்தவனைத் தூக்கி நிறுத்தி அவனைக் குண்டுக் கட்டாக கமக்கப் போனான்... முத்துவேல், அண்ணனைத் திருப்பித் தாக்கலாமா என்று யோசித்தபோது, அத்தைக்காரி உசுப்பி விட்டாள். 'ஏண்டா, பாத்துக்கிட்டு நிக்கீக... சவத்துப் பயல, இழுத்துக் கிடத்துங்கடா...' இதற்குள், அம்மா சொல்லப் பொறுக்காதவர்களாய் மாமா பையன்கள் மாரிமுத்துவை நெருங்கினார்கள்... மாரிமுத்து தம்பியை விட்டுவிட்டு ஓடினான்... அவர்கள் மமதையாய் சிரித்தபோது, வடபத்தியில் ஒரு குலை தேங்காய்ப்பக்கம் கிடந்த ஒரு அரிவாளை அவர்களைப் பார்த்துக் கொண்டே எடுத்தான்... திருப்பாய்ச்சி அரிவாள்... கழுத்தில் பட்டால் தலையோடு வரும்.. முனை வளைந்த அரிவாள்... வயிற்றில் பட்டால் குடலோடு வரும்...

மாரிமுத்து, அசல் அய்யனாராய் ஆனான்... வேட்டைக்குப் போகும் சுடலைமாடன்போல் அரிவாளை ஒருச் சாய்த்தபடியே அவர்களை நோக்கி அடிமேல் அடி வைத்தான்... கண்கள் பஞ்சாக்கினியாகின.... நாக்கு மகிசாகரவர்த்தினிபோல் வெளிப்பட்டது... ஆயுதமற்ற இன்னொரு கையும் அரிவாளாய் விறைத்து நின்றது... அவன் யாருக்கு குறி வைக்கிறான் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/52&oldid=1371987" இலிருந்து மீள்விக்கப்பட்டது