பக்கம்:ஈட்டி முனை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

20 விடில் ஒழியட்டும். நாங்கள் எங்களுக்காகத் தான் எழுதுகிறோமே தவிர, மற்றவர்களுக்காக அல்ல. குயில் தனது இஷ்டம் போல் தான் பாடும். மழையே பெய் என்று பிறர் கூவினால் மேகம் மழையைப் பொழிகிறதா? அது இஷ்டப்பட்ட போது தானே வர்ஷிக்கிறது. காகங்களும் அப்படித்தான்! - இவ் விதம் சின்னதோ கடுகு உள்ளம் பெற்றுவிட்ட வர்கள் பாதிப்பேர். 8. லட்சியமாவது !எழவாவது! கொள்கையாவது! சீர்திருத்தமாவது! உலகம் உருப்படுவது ஏது ! அவரவர் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவது தான் செய்யக்கூடிய காரியம் என்று தங்கள் நிலை யிலே திருப்தி கொண்டு விடுகிறவர்கள் பலர், இப்படி தங்களை உயர்ந்த ஜந்துக்களாகப் பாவிக்கிறவர்களும், தங்களால் ஒன்றும் இயலாது என்று தங்களேயே தாழ்த்திக் கொள்பவர்களும் உருப்படியாக எதைச் சாதித்துவிடமுடியும் அவர் களது அகந்தை மனோபாவமும், தோல்வி மனோபாவ மும் எழுத்திலே தேங்கிக் கிடக்கிறது. கொள்கையற்றவர்களாய், லட்சிய ம ற் ற வர்க வாய் தாங்கள் வாழ்வதுடன் நில்லாது இலக்கியத்தை யே பாழடித்து, சமுதாய வளர்ச்சிக்கு தடை போட்டு வருகிருறார்கள். இத்தகையவர்களே உண்மையான இலக்கியாசிரியர்கள் என்று எப்படி ஏற்கமுடியும்? இலக்கியம் என்பது என்ன? வாழ்க்கையை பிரதி பலிப்பது. வாழ்வின் தன்மைகளையும் தவறுகளை யும் கண்டு. ஆராய்ந்து, சிந்தித்து, நன்மைகளைப் .போற்றி ஊழல் களை ஒழித்து, திருந்தும்படி தூண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/22&oldid=1368996" இலிருந்து மீள்விக்கப்பட்டது