பக்கம்:ஈட்டி முனை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

35 அறிவு என்ன இவர்களின் வளர்ப்புப்பண்ணையா என்று கேட்கிறேன், இலக்கியம் இவர்களது அப் பன் வீட்டுச் சொத் து என்று பதுக்கி வைத்து, மற்றவர்களை முட்டாள்கள் என்று ஒதுக்கிவிட ? தமிழ் என்ன இவர்களது சொந்த அத்தை மொழியோ, இலக்கியத்தை தங்கள் காதலியாகக் கருதி கன்னித்தனமும் கற்புத் தன்மையும் அழியா மல் பாதுகாக்கிறோம் என்று அறியாமை அகந்தை கொள்வதற்கு, எனக் கேட்கிறேன். தமிழ் தமிழரின் உயிர். நாட்டு மக்களி ன் மூச்சு. ஆகவே, மொழியின் ஜீவனே இலக்கியம் மக்களின் சொத்து; மக்களின் சொத்தை, உரிமையை சுரண்டுகிறவன், பறித்துப் பதுக்கிவிடத் தவிப்பவன் சுயநலத்துக்குப் பயன்படுத்த எண்ணுகிற எவனுமே துரோகி தான். மக்களின் துரோகி அவன். மொழி யின் காலகாலன் அவன், நாட்டுப் பண்பாட்டைப் பாழ்படுத்தும் கரையான் அவன். உயிர்க்குலத்துக்கு இழிவு தேடும் புல்லுருவி அவன். உண்மை எ ழுத் தாள ன் இப்படி இரான். அறிவு பெறவேண்டியது மக்களின் கடமை, சிறப் பாக உயிர்வாழ வேண்டியது அவர்கள் உரிமை அத்ற்கு வழிகாணச் சிந்தை செய்ய வேண்டியது அவர்கள் பொறுப்பு, அதற்கு அவர்களைத் தூண்டு வது இலக்கியத்தின் வேலை. தோழனாய், வழிகாட்டி யாய், சமுதாயத்தின் முன்னோடியாக வாழ வேண் டியவன் இலக்கியாசிரியன். அவன் லட்சியவாதி. எவ்விதமான கொள்கையோ, லட்சியமோ அற்று எழுதுகிறவன், வெளவால். அவன் இலக்கியாசிரி யனாகப் பெயர் பெற லாயக்கற்றவன். மனித குலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/28&oldid=1369089" இலிருந்து மீள்விக்கப்பட்டது