பக்கம்:ஈட்டி முனை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

 கிறது. இவை இல்லை என்று கூறுவோர் முன் வரட்டும். என் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் துணியாவிட்டாலும் எழுத்துக்கு உயிர் இல்லை என்று கூறத்தயங்குகிற சொல்லின் வலிவைக் கண்டு வியக்கிற உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசும் உத்தமர்கள்' என்ன சொன்னால் எனக்கு என்ன எனது எழுத்துகள் இலக்கியமே அல்ல என்று கூறிவிட்டால் தான் எனக்கு என்ன கஷ்டம் பழங்காலச் சங்கப் பலகையின் வாரிசு களோ இவர்கள் ஆனால் சங்கப் பலகைக்கு இருக்கிற தாகச் சொல்லப்படும் நேர்மை இவர்களிடம் இல்லை! பளாபளா! முடியோடு முடி புனைந்து தலையை வெட்டிய ஒட்டக்கூத்தன், எட்டியமட்டும் குறும்பையுடன் காத ருத்த வில்லி, குட்டிக்குட்டிப் பெருமை பெற்ற பாண்டி யன், தன் தலையிலே குத்திப் பரிதபித்த சீத்த லைச் சாத்தன் ஆகியோர் அடிச்சுவட்டைப் பின்பற்ற விரும்புகிற கீரர்களோ இவர்கள்! கீரனின் நெஞ்சுத் துணிவும் உண்மையைக் கூறும் ஆற்றலும் இவர்களிடம் இல்லையே! போகட்டும், போலிப் பெருமை பேசி அகமகிழ் பவர்களின் திருப்தியை காணும் எனது நண்பர்களும் கெடுக்க விரும்பவில்லை ஆனால் எதேச்சாதிகாரி களின் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. எதி லும் சரி இவர்களைப் போன்றவர்களின் ஆதிக்க வெறி, சுரண்டல், உயர்ந்தவர் எனும் சித்தாந்தம் முதலியவற்றை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் சாவுமணி அடிக்கப்பட்டு வருகிறது. சமாதிக்குழி தோண்டியாகிறது என்பதற்கு முன்னறிவிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/34&oldid=1370303" இலிருந்து மீள்விக்கப்பட்டது