பக்கம்:ஈட்டி முனை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஈட்டி முனை
1. சங்கநாதம்

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
ழங்கல் கடல் இவற்தேடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம்
நாங்கள் ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய்
முழங்கு சங்கே!

(பாரதிதாசன்)

'கன்னித் தமிழ் அணங்கு கரீமுடிஞ்சு போம் என்று' கனவு கண்டு வருகிறது. ஒரு கூட்டம் -- தமிழ் நாட்டில் தாங்கள் எழுதவில்லை யென்றால்!

'ஆதிசிவன்' பெற்று விட்டதாகவும் அகத்தியன் எனுமோர் ஆரியன் இலக்கணம் கண்டதாகவும், ஆந்தப் பரம்பரையிலே வந்த ஒரு சிலரால் தான் தமிழ் வாழ்கிறது என்றும் கனவு காண்கிறது. ஒரு கும்பல், சுண்டு வந்திருக்கிறது. இன்னும் கனவு கண்டு தங்களையே போற்றிப் பெருமகிழ்வு கொண்டு வருகிறது.

இருட்டறையிலே ஒண்டி, சுயப் பிரதாபக் கனவு காண்பதுடன் கிடந்தால், அறியாப் பேதைகள் என அனுதாபம் காட்டலாம், சுயநல கருத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/5&oldid=1535509" இலிருந்து மீள்விக்கப்பட்டது