பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


தனித்தனியே பார்ப்பனர்க்கும் திராவி டர்க்கும்
தமிழ்நாட்டுக் குருகுலத்தில் உணவளித்துத்
தன் இனத்துக் குயர்வுதனை வ.வெ.சு. ஐயர்
தழைக்கவைக்க முயன்றதனால் பணங்கொடுக்க
இனிமுடியா தென மறுத்தார் தந்தை. காந்தி
இத்தவற்றைக் கண்டித்தும் ஐய ரோதாம்
நினைத்ததுதான் சரியென்றார்: பார்ப்ப னியம்
நீங்கும்வரை இழிவிருக்கும் என அறிந்தார்!

தன்னாலே யான வரை பார்ப் பனீயம்
தனையொழிக்க வழியாய்ந்தார் வகுப்பொவ் வொன்றும்
முன்னேற வேண்டுமெனும் கொள்கை நாட்ட
முதன்முதலில் குடியரசு தொடங்கிவைத்தார்
தென்னாட்டார்க் கென்னென்ன தேவை என்று
தெளிவாக ஆராய்ந்து மனுவின் நீதி
சொன்னாலும் வெட்கம்வரும் கம்பன் பாடல்
சூழ்ச்சிசொலும் புராணங்கள் எரிக்கச் சொன்னார்!