பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்காத்த போராட்டம்

தன் வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டை
   வளமாக்கத் தகுஞ்செயல்கள்
நன்றாற்றி நம்பெரியார் ஈ.வேரா
   முதுமைதனைக் கண்ட போதில்
தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்
   புன்மொழியைத் தேசப் பேரால்
சென்னைமுதல் அமைச்சர்வர் கட்டாயம்
   ஆக்கிவிடத் திட்டம் செய்தார்:

தாய் மீதில் விருப்பற்ற ஒரிளைஞன்
   தன்னுழைப்பைத் தாய்நாட் டிற்கே
ஈயென்றால் மதிப்பானா?, எதிரிமொழி
   மதித்துயிர்வைத் திருப்பான் பேடி!
தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியை
   மறைத்திந்தி தோன்றின் நாடே.
தாயென்ற நிலைபோகும் தமிழ்சாகும்!
   இந்தியெனும் கனிமே லாகும்!