பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


ஈதறிந்த ஈரோட்டுத் தாத்தாதாம்
   ஓயாமல் எழுத்தி னாலும் - மோதியுணர்
வலையெழுப்பி மக்களைத்தம்
   வயப்படுத்தும் மொழியி னாலும்,
தீதுவரும் இந்தியினால் முன்னேற்றம்
   தடையாகும்! தீந்த மிழ்க்கும்
ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!
   இந்திஉயர் வாகும் என்றார்.

சிறுதுரும்பும் பற்குத்த உதவும் இந்த
   இந்தியெனும் தீமை மிக்க
சிறு மொழியால் எட்டுணையும் பயனில்லை!
   அது வளர்க்கச் செலவ ழிக்கும்
பெரும்பணமோ தமிழர்களின் பணமாகும்.
   படிக்கவரும் பெரும்பா லோர்தாம்
வெறும்பேச்சுப் பேசித்தம் வயிறடைக்கும்
   வித்தைகற்ற மேலோர் என்றார்!

ஆட்சிசெயும் முதலமைச்சர் பார்ப்பனராய்
   இருந்தமையால் அவர்வ டக்குப்
பேச்சுதனைத் தமிழகத்தில் வளர்த்துத்தீந்
   தமிழ்கெடுக்கும் பெருவிருப்பால்
சூழ்ச்சிசெய்தார்! இவ்வுண்மை தனையறிந்து
   மக்களுக்குச் சொன்னார் தாத்தா
‘சீச்சியிவர்’ துரோதி எனச்செந்தமிழ்
   ராய்ப்பிறந்தும் சிலர்ப ழித்தார்!.

தூய்தமிழை வடமொழியாம் நச்சகற்றிக்
   காப்பாற்றத் துடிக்கும் நெஞ்சு
வாய்ந்ததிருப் பாரதியார் தலைமையிலே
   கூடிநின்ற மிக்க ஆர்வம்