பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


நெடுநாட்கள் உறங்கிவிட்ட தமிழ்ப்பெண்கள்
   தமையெல்லாம் நீ எழுப்பித்
தொடுப்பீர் போர், தமிழ்த்தாயைத்தொலைக்கும்வழி
   தடுத்தென்றே தூண்டி விட்டாய்!
கொடுங்குற்றம் செய்தனை நீ யபராதம்
   கொடுவென்று கூறி இன்னும்
கடுங்காவல் தண்டனையிட் டடைத்தார்கள்
   தாத்தாவைக் கம்பிக் கூட்டில்!

வெள்ளியமென் தாடிய சைந் தாடத்தன்
   மேனியிலே முதுமை தோன்ற
அள்ளி உடை ஒரு கையில் தடியை மறு
   கையிலெடுத் தலர்ந்த பூப்போல்
வெள்ளைமனத் தூய்மையது முகத்தினிலே
   மலர, உடல் மெலிந்து, கண்டோர்
உள்ளமெலாம் கசிய, மழை போற்கண்ணீர்
   பொழிய, சிறைக் குள்ளே சென்றார்!

தாத்தாவைச் சிறையிட்டுத் தமிழர்களை
   எளிதாகத் தாம்அ டக்கப்
பார்த்தார்.அவ்வரசியலார் பயனில்லை!
   தமிழகத்தைப் பார தத்தில்
சேர்த்தாளும் முறைமையினால் தமிழழிக்கப்
   பகைசூழ்ச்சி செய்த தாய்ந்து
தாத்தாசெந் “தமிழ்நாடு த மிழர்க்கே’’
   எனுந் திட்டம் தமிழர்க் கீந்தார்!

தமிழரெலாம் மாநாடு கூட்டிஅதில்,
   சிறையிருக்கும் தாத்தா வைப்போல்
அமைத்தஉரு வம்தலைவ ராகப்பன்
   னீர்ச்செல்வம் அருகு வந்தார்.