பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈரோட்டுத் தாத்தா




வாழ்வளிக்க வந்தார்

உலகெலாம் இன்பம் உற்றிடத் தமிழகத்து
இலகுநா கரிகம் எங்கணும் பரப்பி

வாழ்ந்தநாள் யாவும் வீழ்ந்தன! தமிழகம்
தாழ்ந்தது, துயரே தழைத்தது! எங்கணும்

குறுகிய மார்பும் குனிந்த தலையும்
சிறுமனப் பான்மையும் நிறைந்து விளங்கத்

தமிழர்கள் யாரும் தளைப்பட் டாராய்
அமைதியில் லாத அடிமை மாக்களாய்

இலங்கினர் அறிவில் ஏற்றம் இன்றிக்
கலங்கினர்! ஏறக் கருதிய துறைஎலாம்

பிறவிப் பகைவர்கள் பெருமையோ டிருந்து
முறைசெயும் அரசியல், மொழி, மதம், கல்வி

எனுமித் துறைகள் எவற்றினும் மேலாய்த்
தனியர சோச்சித் தமிழர் முன்னேற்றம்

எளிதடை யாமல் இயன்றவா றெல்லாம்
வழியடைத் திருந்தார் வஞ்சனை பெருகவும்

தமிழரில் சாதி வகுப்புகள் நாட்டித்
தமையுயர்ந் தோராய் அமைத்துக் கொண்டார்!