இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செயற்கரிய செயல்கள்
தன்வீட்டார் பிறர்வீட்டில் உண்ணாமல்
பார்ப்பனர்போல் இருக்கச் சொல்லும்
புன்மைதனை வெறுத்துத்தம் புத்திவழி
போனதனால் பொறுமை மீறித்
தென்னாட்டில் யானைகட்குக் கால்விலங்கு
போட்டடக்கல் போலே யந்நாள்
தென்னாட்டுப் பெரியாருக் கன்னார்தம்
பெற்றோர் தாம் தளையிட் டாரே!
பார்ப்பனரும் பண்டிதரும் தம் வீட்டில்
கதைபேசிப் பணம்ப றிக்கப்
பார்க்குங்கால் அவர் கதையில் பலகுற்றம்
இழிவுபல இருத்தல் கண்டே
ஆர்ப்பரித்து நகையாடிக் கேள்விபல
கேட்குங்கால் அவர்கள் நாணி
வேர்த்துப்போய்த் தக்கபடி விடைகூறத்
தெரியாமல் விழித்து நிற்பார்!