18
❖
உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்
வா, வாழ், வாகை, கை - என்று நான்கு சொற்களாகப் பிரிவதை நாம் பார்க்கலாம்.
பிரிந்து நிற்கும் அந்த நான்கு சொற்களும், விரிந்து வளர்ந்தோங்கிய கட்டளைகளை விரித்து வைத்துக் கொண்டு நிற்பது போல் தோன்றுகிறது அல்லவா?
முதல் சொல் ‘வா’ என்கிறது அழுத்தமாக.
இரண்டாவது சொல்லான ‘வாழ்’, வந்து வாழ்ந்து கொள் என்று அழைப்புவிடுக்கிறது திருத்தமாக.
மூன்றாவது சொல்லானது ‘வாகை.’ அந்தச் சொல்லுக்கு வெற்றி என்பது ஒரு பொருள். மாலை என்பது ஒரு பொருள். வெற்றிகரமாக வாழ் என்பது வாழ்க்கையின் கட்டளை.
வெற்றிகரமான வாழ்வு எப்படிக் கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்? ஒழுங்காய் இருந்தால்தான் கிடைக்கும்.
ஆக, வாகை என்ற சொல்லுக்கு ஒழுங்காய் இரு.
ஒழுங்காய் இருப்பது எப்படி என்கிற கேள்விக்கு நல்லதொரு பதிலைத் தருவதுதான் ‘கை’ என்ற நான்காவது சொல்.
‘கை’ என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருள் அதாவது உலக ஒழுக்கம். செய்யத்தக்கது என்பதும் ஒரு பொருள். அதாவது உலக ஒழுக்கத்திற்கு, ஒழுங்குபட வாழ்வதற்குச் செய்யத்தக்கவைகளாகச் செய்கின்ற ஆற்றல் என்பது உண்மையான பொருள்.