பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

31



பெற்றிருக்கும்போது 'அறணி' என்று அழைக்கப்பட்டாள்.

இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் ஒருவன், குணநலன்களில் தனவானாகத் திகழ்கின்ற பொழுது அறன் என்று அழைக்கப்படுகிறான்.

4. இந்திரன்

இந்திரலோகத்து தேவனான இந்திரன் இங்கே எங்கே வந்தான் என்று நீங்கள் கேட்கலாம். அவன் பெயரில் மட்டும்தான் இந்திரன். இந்தரியங்களின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு, ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு, மண்ணிலும், விண்ணிலும், மானத்தை இழந்த ஒரு தேவத்தலைவன் என்ற கதைக்கு உரியவன் அந்த இந்திரன்.

ஆனால், நான் சொல்கின்ற இந்திரன் அப்படிப்பட்டவனல்ல. ஐம்புலன்களாகிய இந்திரியங்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்கப் பண்பினால் உலகத்திற்கு குருவானவன். சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் தன்னுடைய பஞ்சேந்திரியங்களை அடக்கித் தலைமை யேற்று அவன் வழி நடத்துகிறவன்.

இந்திரியங்களின் திறனை வாழ்க்கையின் மேம்பாட்டுக்காக, மக்கள் சமுதாயத்தின் உயர்வுக்காகத் தத்தம் செய்தவன். அவனுடைய செய்கைகளும், சொற்களும் எப்பொழுதும் அமுதமாகவே வெளிவரும் பின்பதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்றே சான்றாகும்.

"இந்திரன் அமுதம் இயைவதாயினும்
தமியராய் உண்டலும் இலரே”

}}