எஸ்.நவராஜ் செல்லையா
❖
35
1. காற்றை ஆழ்ந்து உள்ளே இழுத்துச் சுவாசிப்பது.
2. இழுத்த காற்றை உள்ளே அடக்கி வைத்திருப்பது.
3. அடக்கிய காற்றை வெளியே விடுவது.
4. மூச்சை இழுக்காமல், அடக்காமல் விடாமல் கம்மா இருப்பது.
சுவாசத்திற்கும், அம்சத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும்.
உயிர்க் காற்று என்பது இறை சக்தி. அது உள்ளே புகும்போதும், வெளிவரும்போதும் ஒருவித இனிமையான ஒலியை அதாவது உயிரோட்டமுள்ள இசையை இசைத்துக் கொண்டு இயங்குகிறது.
'சம்' என்ற ஒசையுடன் உயிர்க்காற்றை உள்ளே இழுக்கிறோம்.
'சம்' என்ற ஒசையுடன் உள்ளிழுத்த உயிர்ப்புக் காற்றை வெளியே விடும் பொழுது 'ஹம்' என்று வெளிவிடுகிறோம்.
இப்படியாக வெளிக்காற்று உள்ளே போவதும், உள்காற்று வெளியே வருவதும், இயல்பாக, இயற்கையாக, இதமாக, பதமாக, சுகமாக நம்மை அறியாமல் செய்து கொண்டு இருக்கும்போதுதான், ஹம்சம் அதாவது, அம்சம், அம்சம், அம்சம் என்ற ஒசையால் அம்சமாகிவிட்டது.
இந்த அம்சப் பணியினால், உடலும்,மனமும், ஆத்மாவும் எவ்வாறு அம்சம் பெறுகிறது என்றால்