பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இரகசியம் - 5
சாப்பாடு

சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடும் குரல் எல்லாயிடங்களில் இருந்தும் வருவது இயற்கை. தானங்களில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஒருவர்க்குச் சாப்பாடு போடுவது என்பது சகல தர்மங்களுக்கும் சிகரம் வைத்தது போல என்பார்கள். ‘உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே’ என்று பாடுவார்கள். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்று கூறுவார்கள்.

ஏறத்தாழ எல்லா முக்கிய பழமொழிகளிலும் சாப்பாடு பற்றிய பழமொழி சத்தியமாகவே இடம் பிடித்துக் கொண்டிருக்கும். ஏனென்றால் மனிதனுக்கு வேண்டிய முக்கிய மூன்று அவசரத் தேவைகளில் உணவுதான் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டு இருக்கிறது.