பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


‘இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’ என்கிறார். வயிறில்லாமல் உடலில்லை. வளம் தரும் சாப்பாடு இல்லாமல் உடல் இல்லை.

இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டால் தான் அன்றாட வாழ்க்கை ஆனந்தமாய்க் கழியும்.

“பிறகு சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது? அதற்கு ஏதாவது வேறு பெயர் உண்டா?” என்று நீங்கள் கேட்கவிழைவது எனக்குப் புரிகிறது. சாப்பாடு என்று சொல்வதைவிட, உணவு என்று சொல்லிப் பாருங்கள். ஒரு இனிமையான உணர்வு உங்களுக்குள்ளே தோன்றி ஜொலிக்கும். உணவு என்பது ‘உண்+அவ்’ என்ற பிரிகிறது. ‘உண்’ என்றால் பசித்து ‘அவ்’ என்றால் விரும்பி. நீங்கள் உண்ணுகிற உணவு எதாக இருந்தாலும், எப்படியாக இருந்தாலும், அதை நீங்கள் ரசித்து விரும்பிச் சாப்பிடும் பொழுது வயிறு அப்படியே ஏற்றுக் கொள்கிறது. அங்கே அற்புதமான ஜீரணப்பணியும் அமோகமாக நடக்கிறது.

ஒரு கவிஞர் வயிற்றைப் பற்றி இப்படி வேடிக்கை யாகக் கூறுகிறார்.

“பசிக்கும் போது பாகற்காயும் இனிக்கும்

  பசியாத போது பிரியாணியும் கசக்கும்.”

உணவை இரசித்துச் சாப்பிடுகிற உணர்வு வேண்டும் என்பதற்காகத்தான், ‘சாப்பாடு’ என்ற சொல்லை வல்லினத்தில் கூறியிருக்கிறார்கள். ‘உணவு’ என்பதை மெல்லினத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

உணவை இதமாக, பதமாக, மிதமாகச் சாப்பிடுங்கள். அதையே உணவு உண்ணுங்கள் என்றனர். சகல