பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

57



இருக்கிறோம். அல்லது ஒரு காரியத்தைச் செய்துவிட்டு அதன் முடிவுக்குக் காத்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த மனிதர் வந்துவிட்டால் அல்லது நாம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அப்பொழுது நமது மனம் மகிழ்ச்சியால் விரிந்து கொள்கிறது. மகிழம் பூ விரிந்து மணம் பரப்புவது போல மனமும் விரிந்து இன்பத்தைத் தெளித்து விடுவதால் அதனை மகிழ்ச்சி என்று மங்கலகரமாகச் சொல்கிறார்கள்.

மனதால் ஏற்படுகிற மகிழ்ச்சி பூரிப்பையும், புத்துணர்ச்சியையும், புதிய சக்தியையும் அளிக்கின்ற காரணத்தால் அதை மகிழ்ச்சி என்று கூறுகிறார்கள்.

3. ஆத்மாவால் ஏற்படுகிற ஆனந்தம் (Happiness)

இதை ஆங்கிலத்தில் Happiness என்று சொல்வார்கள். தமிழிலே களிப்பு. அதாவது ஆனந்தக் களிப்பு என்று சொல்வார்கள்.

'ஆத்மா' என்றால் 'காற்று'. 'காற்று' என்றால் உயிர். ஆனந்தம் என்ற சொல், ஆன்+நந்தம் என்று பிரிகிறபோது, ஆன்மாவின் பெருக்கம். உயிரின் ஆற்றல், வலிமை என்று வளர்ந்து கொள்கிறது.

ஆன்மாவின் அதாவது உயிர்க்காற்று நிறைய, நிறைய உடலுக்கும் மனதிற்கும் ஏற்படுகின்ற மகிழ்ச்சி, சந்தோசம் மகிமை பெற்றுக் கொள்கிறது. இந்த ஆனந்தம் பெருகப் பெருகத்தான் மூச்சுப் பயிற்சி செய்கிற துறவிகளும், சித்தர்களும் அதை ஆனந்தம், பரமானந்தம், பேரின்பம் என்றெல்லாம் பேசுகின்றார்கள்.