இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கலையும் கலைஞனும்
கற்பிக்கும் திறனை கலையம்சம் நிறைந்தது என்று நாம் கூறுவோமானால், கற்பிக்கும் திறன் நிறைந்தவரை, நாம். கலைஞன் என்றே அழைத்து மகிழலாம்.
ஒருவர் எவ்வளவு கற்றிருக்கிறார் என்பதில் பெருமையில்லை. அவர் பிறருக்குப் புரியும்படி எப்படி கற்பிக்கிறார் என்பதில் தான் அவரது ஆற்றலும் பெருமையும் அடங்கியிருக்கிறது.
அப்படிப்பட்ட ஆற்றலையும் சிறப்பையும் பெற, ஒருவர் தம்மைத் தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
பிறர் போற்ற, விரும்பி ஏற்றுக் கற்றுக் கொள்ளும் எழுச்சி மிகுதியாகக் கற்பிக்கும் திறனையே கற்பிக்கும் திறன் முறுக்கம் என்று கூறுகிறோம். (Presentation Technique)
இந்தத் திறன் நுணுக்க முறையை, ஓர் ஆசிரியர் இரண்டு வகையில் ஏற்படுத்திக் கொள்ளலாம்.