பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள மான சவ: மாணவியர்க்கு, விளையாட்டுக்களும் - உடற்பயிற்சிகளும், இன்றைக்கு வலிமையோடு வாழ உதவுவதுபோல, நாளைக்கு இளமையோடு வாழவும் உதவுகின்றன. உலக மக்கள் எல்லோரும் விளையாட்டுக்களில் உற்சாகத்துடன் பங்கு பெறுகின்றனர். போட்டியிட்டு தங்கள் திறமையை தெரிந்து கொண்டு திருப்தி அடைகின்றனர். பொழுது போக்கி மகிழ்ந்து வாழ்கின்றனர். - நேரத்தை மகிழ்ச்சியாகப் போக்கி மூளையை வளமுடையதாக ஆக்கும் அனுபவங்களுடன் அறிவை பெருக்க, வாழ்க்கை இலட்சியங்களை வெற்றிகரமாக நிறை வேற்ற விளையாட்டுக்கள் வழி காட்டுகின்றன. நமது வாழ்வின் ஒரு பகுதியாக, பிரதி பலிப்பாக விளையாட்டுக்கள் விளங்குவதால்தான், நாம் விளை யாட்டுக்களை விரும்புகிறோம். வேண்டிய பயன் களையும் மிகுதியாகப் பெறுகிறோம். . . . விருப்பம், மன உறுதி, தியாக மனப்பாண்மை மூன்றையும் விளையாட்டுக்கள் அதிகமாக வளர்த் து விடும் ஆற்றல் பெற்றவை. இவற்றை நீங்கள் மிகுதி யாகப் பெற்று, மேன்மைகளை நிறைய பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் புத்தகத்தை எழுதி, தயாரித்திருக்கிறேன். o பயன் பெறுங்கள் என்று வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். . . . . . . . - - *ւլ tër, டாக்டர் எஸ். தவராஜ் செல்லையா 8Ο