பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

105


நிரூபிக்கவோ முடியாமற் செய்துவிடுகிறது என்பது இந்தக் கொள்கையின் கருத்தாகும்.

2. வெற்றிபெறவேண்டும் என்பது மட்டுமே முக்கியம். இந்தத் தத்துவத்தின் உண்மையான நோக்கமே இதுதான். அறிவும் அனுபவமும் உண்மையைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. அந்த உண்மையும் நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். ஏனென்றால், இன்றைய உண்மை; நாளைய பொய்யாக போய்விடுவதும் உண்டு.

ஆகவே, இந்தத் தத்துவவாதிகள், நடைமுறைக்கு உகந்த கோட்பாடுகள் உண்மையான தத்துவம் என்றும்; நடைமுறைக்கு ஏற்றதல்லாத கோட்பாடுகள் பொய் என்றும் நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும் கருதுகின்றார்கள். நம்பவும் செய்கின்றார்கள்.

3. வளர்ச்சியுற்ற பெரியதொரு சமுதாயத்தின் அங்கமாக மனிதன் இருக்கிறான். அவனது செயல்கள் யாவும் சமுதாயத்தையே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தத்துவமானது. மனிதனும் சமுதாயமும் சேர்ந்து சுமுகமாக வாழ முடியும் என்றும்; தனிப்பட்டவர்களை மதிக்கும் சமுதாயமும், சமுதாயத்தை மதிக்கும் தனிப்பட்ட மனிதனும் சேர்ந்த சுதந்திரக் கொள்கைகளை உடையவர்களாக வாழமுடியும் என்றும் கருதுகின்றார்கள்.

4. இந்தத் தத்துவத்தின் ஆரம்ப கர்த்தா என்று குறிப்பிடப்படுபவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த “ஹிரா கிரிட்ஸ்” என்பவர், இந்தக் கொள்கையை ஆதரித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் குயின்டிலியன், பிரான்ஸிஸ் பேகன், சார்லஸ் பியானு என்பவர்கள் ஆவார்கள்.