பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

181




மனதுக்குரிய வேலை (mind) மரியாதை மிகுந்த, மகிமை நிறைந்த வேலையாகும். செய்திகளை சேகரித்துக் கொண்டு, அதற்கேற்ற கட்டளைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது முழுமையான மனித உடலின் மாண்புமிகு பணியாகும்.

மனிதர்களின் தனிப்பட்ட செயல்களானது. அவர்களது சுற்றுப்புறச் சூழ்நிலைகள் தருகின்ற தன்மைகளுக்கேற்பவே அமைந்து விடுவதால், மனிதர்களும் அவர் வாழும் சூழ்நிலைகளும் இரண்டறக் கலந்தனவாகவே அமைந்து விடுகின்றன.

வெளியுலகில் ஏற்படுகின்ற இயக்கங்கள் யாவும் புலன்கள் வழியாகப் படித்து, நரம்புகள் வழியாக மிதந்து, மூளைக்குச் செல்கின்றன. என்ன காரணம், அதற்கு எப்படிப்பட்டக்காரியம் செய்யவேண்டுமென்று மூளை முடிவு செய்கிறது. ஆணையை ஏந்திச் செல்லுகின்ற நரம்புகள் மூலமாகத் தசைகளுக்குத் தந்துவிட, அந்தச் சூழ்நிலையின் அவசியம் அல்லது அவசரத்திற்கேற்ப, காரியம் நிறைவேற்றப்படுகிறது. ஆகவே மனதின் படி செயல்கள் நடக்கின்றன. செயல்களுக்கேற்ப மனம் முடிவெடுக்கிறது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு குறிப்பு

உடற்கல்வி ஆசிரியர்கள் குழந்தைகளுக்குப் பயிற்சிகள் கொடுக்கும் பொழுது, உடலை மட்டும் நினைத்து உடலுக்காக மட்டும் பயிற்சிகளைத் தரக்கூடாது.குழந்தைகளின் முழுமையை உணர்ந்து. மனதுக்கும் உடலுக்கும் சேர்த்து, முக்கியத்துவம் அளித்து, பயிற்சியளிக்க வேண்டும்.இது மிகவும் இன்றியமையாத குறிப்பாகும்.