பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

187




இப்படியே சிறிது நாள் கழிந்தது, உணவும் இல்லாமல், மணி சத்தமும் கேட்டபொழுது,நாய்க்கு எச்சில் ஊறுவது நின்று போனது.

ஆகவே உணவு என்பது இயற்கைத் துண்டல். இயற்கைத் தூண்டல் இருக்கும்போது தான், செயற்கைத் தூண்டலும் பலன் பெறுகிறது. இயற்கைத் தூண்டல் இல்லாமல், செயற்கைத் தூண்டலால் எதிர்பார்த்த எதிர் செயலை உருவாக்கிவிட முடியாது. அகவே, செயற்கைத் தூண்டல்+இயற்கைத் துண்டல் எதிர் செயல் என்பதாக அமைகிறது. இயற்கைத் தூண்டல் நடுவில் இருந்து எதிர் பார்த்த காரியத்தை இயக்குகிறது என்பதுதான் பாவ்லோவின் கண்டுபிடிப்பாகும்.

பாவ்லோவின் பரிசோதனை

மணி அடித்தவுடன், அந்த சத்தத்தைக் கேட்ட நாய்க்கு எச்சில் சுரப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்தியாகி விட்டது.அது நாய்க்குத் தவிர்க்க முடியாத தூண்டுதலாகி விட்டது. நிலைத்து விட்டது. இப்படி ஏற்பட்ட நிலைமைக்கு ஏற்ப, நாயின் உறுப்புக்கள் பழகிக் கொண்டன. அந்தத் தூண்டுதலுக்கு ஏற்பட செயல்படத் தொடங்கின.

அதனால்தான், செயற்கைத் துண்டல்களை விரிவு படுத்தும்போதும், அதற்கேற்ப உடலுறுப்புக்கள் ஏற்றுக் கொண்டு, இணக்கமாக செயல்படுகின்றன என்று கூறிய பாவ்லோவ், மணி சத்தம் கேட்டதும் நாயின் ஜீரண சுரப்பிகள் செயல்படத் தொடங்கியதையும், எலும்புத் தசைகள் இயங்கத் தொடங்கியயுைம் நிரூபித்துக் காட்டினார்.