பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

215



விளையாட்டு அவசியமே!

பெற்றோர்கள் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டிலிருந்து, விளையாட்டு மக்களையும் மாணவர்களையும் விடுவிக்கிறது.அவர்களை சுதந்திர மனிதர்களாக உலவவிடுகிறது. உலாவரச் செய்கிறது.

விளையாட்டு மக்களுக்கு கல்வியாக விளங்குகிறது. வாழ்க்கையின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறது.அறிவான அனுபவங்களை அள்ளித் தெளிக்கிறது. சுவையான செய்திகள், உற்சாகம் ஊட்டுகின்ற சந்தர்ப்பங்கள், இவற்றை விளையாட்டுக்கள் தந்து, தனிப்பட்ட மனிதரின் சிந்தனைத் தெளிவினை ஜீவநதி போல வற்றாமல் ஒடச் செய்கிறது.

விளையாட்டு வெறும் அனுபவங்களை வழங்கி அறிவோடு செயல்பட வைப்பதில்லை. உந்துதல் துண்டுதல்களுக்கு ஏற்ப உடனடியாகச் செயல்படவைக்கும் எதிர் செயலாற்றலையும் துரிதப்படுத்திடும் வகையில் கற்றுத் தருகிறது. உற்சாகம் குறைந்து போகாத வண்ணம் வளர்த்துவிடுகிறது.

சில விளையாட்டுக்கள் சிறந்த சிந்தனா சக்தியையும் அறிவாற்றலையும் அதிகமாக்கிடும் வண்ணம் வளர்க்கும் பாங்கிலே அமைந்திருக்கின்றன. அதாவது யோசித்தல், நுணுக்கமாக சிந்தித்தல், செயல்படுகிற முறையில் சடுதியில் கணித்தல் போன்ற திறமைகளையும் விளையாட்டு விளைத்து விடுகிறது.

ஆகவே, குழந்தைகளின் எதிர்காலத்தைக் களிப்பானதாக, கடமையுணர்வு மிக்கதாக, கட்டுப்பாட்டில் திளைப்பதாக, விளையாட்டுக்கள் வளர்த்து, சந்தர்ப்பங்