பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

உடற்கல்வி என்றால் என்ன?




வீடு, பள்ளி, சங்கங்கள், கழகங்கள் போன்றவற்றில் ஒவ்வொரு மனிதரும் தாங்கள் சங்கமம் ஆகிக் கொள்வதுடன், அவற்றில் தங்களது பாணியையும் இணைத்துப் பதித்துக் கொள்கின்றனர். அதனால்தான, “ஒரு மனிதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அவனைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்” என்று நாம் கூறுகிறோம். பெரியவர்களும் கூறுகின்றார்கள்.

ஒரு குழந்தை உலகத்தில் பிறக்கும்போது, அதற்கு இந்த உலகின் சமூக அமைப்பு தெரியாது. இந்த நன்னடத்தைக் கொள்கைகள் புரியாது. கலாச்சாரம் தெரியாது. தான் வாழ்கிற சமூக அமைப்பின் சக்தி பற்றியும், மகத்துவம் பற்றியும் அதற்குத் தெரியாது.

சிறு குழந்தைகள் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், குறிக்கோள்கள், கொள்கைகள், லட்சிய நோக்கங்கள் பற்றி எதுவும் தெரியாமலே, சமுதாயச் சூழலில் தவழ்து செல்கின்றனர்.

ஆனால், சமூகத்தில் உள்ளவர்கள் தங்களுக்குக் காட்டுகின்ற அன்பு, அனுதாபம், நட்பு, எல்லாம் புரிகிறது. ஒன்று சேர்ந்து கூடி பேசுகிற, விளையாடி மகிழகின்ற பல வகையான அனுபவங்கள் குழந்தைகளுக்கு நிறையவே கிடைக்கின்றன.

ஐந்தறிவுள்ள மிருகங்கள் போல் வாழ்கின்ற குழந்தைகள், கொஞ்சங் கொஞ்சமாக, சமூக அமைப்பு எனும் ஏணியில், அனுபவம் என்கிற ஒவ்வொரு படியிலும் படிப்படியாக ஏறிப் பழகிக் கொள்கின்றனர்.

சமூகத்தின் பிடியும் கொஞ்சங் கொஞ்சமாகக் குழந்தைகள் மேல் அழுந்துகிறது. குழந்தையையும்