பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

65




விளையாட்டுக்களில் உள்ள விதிகளை மதிக்காமல் புறம்பாக நடப்பவர்கள் முதலில் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் தொடர்ந்து தவறிழைப்பவர்கள் விளையாட்டை விட்டே வெளியேற்றப்படுகின்றார்கள்.

நாட்டிலும் அப்படித்தான். சட்டத்தை மீறுபவர்களுக்குத் தண்டனை.இன்னும் வேறுபல தண்டனைகளும் கிடைக்கின்றன.

விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் விதியை மதிக்க, நேசிக்க, முறையாகப் பின்பற்ற, சிறந்த விளையாட்டாளர்களாக விளங்க கற்பிக்கப்படுகின்றார்கள்.

அப்படியே அவர்களை விதிக்குட்பட்டு வாழக் கற்றுத் தந்து, நாட்டு சட்டங்களையும் மதித்து நடக்கும் நல்ல குடிமகன்களாக மாற்றவும் உடற்கல்வி உதவுகிறது. ஆகநாட்டில் நல்ல மக்களை உருவாக்கும் பெரும்பணியில் உடற்கல்வியின் பங்கு பெரிதாக விளங்குகிறது.

4. பொறுப்புணர்ந்து நடத்தல்

நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதருக்கும் உரிமைகள் உண்டு. கடமைகள் உண்டு. பொறுப்புகளும் உண்டு.

அவற்றை விளையாட்டுக்களில் பங்குபெறும்போது உணரலாம். ஒவ்வொரு ஆட்டக்காரரும் தான் நிற்கும் இடத்திற்கேற்ப ஆடுதல்; தன் குழு தோற்றுப்போகாமல் வரும் தடைகளை உடைத்து முன்னேற முயலுதல் தனது கடமையை உணர்தல்; அதற்கேற்ப தொடர்ந்து பணி யாற்றுதல்; சேவை புரிதல்; துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுதல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பொறுப்பான பணிகளில் ஈடுபடுவதை நாம் காணலாம்.