பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரிந்து கொள்வீர்!

ஆஸ்தீகம் எது? நாஸ்தீகம் எது? அறிந்து சொல்வீரே! - நன்றாய்ப் புரிந்து கொள்வீரே! சாஸ்திரம் காட்டும் சுயநலமோகம் ஆஸ்திகமா? இல்லை நாஸ்திகமா? மக்கள் சமத்துவங் காட்டும் பொதுநலத் தியாகம் நாஸ்திகமா இல்லை ஆஸ்திகமா - இதில் காணிக்கை கொடுத்து கற்பூரச் சுடரால் கடவுளைக் காண்பது ஆஸ்திகமா? - அது கல்லாமையென்பது நாஸ்திகமா? காணரும் அன்பால் நாணயமாகக் கடமையைப் புரியெனல் நாஸ்திகமா? - அதற் குடன்பட மறுப்பது ஆஸ்திகமா? - இதில் சம்சாரி உழைத்துச் சந்யாசி கொழுக்கத் தருமம் புரியெனல் ஆஸ்திகமா? - அது சரியில்லையென்பது நாஸ்திகமா? சரி சமமாக எல்லோரும் வாழ்வது தகுமெனச் சொல்வது நாஸ்திகமா? - அதில் பகைமை கொண்டாலது ஆஸ்திகமா? - இதில் கருடனைக் கண்டால் கிருஷ்ணா கிருஷ்ணாவெனக் (ஆஸ்தீகம்) (ஆஸ்தீகம்) (ஆஸ்தீகம்) கன்னத்தில் போடுவது ஆஸ்திகமா? - அதைத்தன் மதிப்புக் குறைவெனல் நாஸ்திகமா? அறிஞனைக் கண்டால் அப்பா ஐயா வென்று பெருமைகொண்டாடல் நாஸ்திகமா? - அதில் பேதம் பேசுதல் ஆஸ்திகமா? - இதில் தோத்திரமாலை கீர்த்தனம்பாடிச் சுண்டல் புசிப்பது ஆஸ்திகமா? - அதைக் கொண்டாட மறுப்பது நாஸ்திகமா? - வாய் 153 (ஆஸ்தீகம்)