பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரம வளாததருமவாய: உலகம் வாழ வானம் மழை பொழிந்திட வேண்டும் - வானம் பொழிந்திட நாம் வனமரங்கள் வளர்த்திட வேண்டும். - இந்த (உலகம்) புலங்கள்தோறும் பூண்டு புல்லும் வளம்பெற வேண்டும் - கதிர் விளைந்திட வேண்டும் - உயிர் இனங்கள்யாவும் அருந்தி நாளும் சுகம் பெற வேண்டும் - நாம் துணை செய்ய வேண்டும் - இந்த (உலகம்) வானம் வழங் காதெனிலோ ஊணுடை யேது? - உயர் தானம் தருமம் தவமெய்ஞ் ஞானமும் ஏது? - நலங் காணும் கடவுள் பணிகள் காட்சியு மேது? - முதல் காரணம் மாமழை இலையேல் தோற்றமும் ஏது? - எழுவகைத் தோற்றமும் ஏது? - அதனால் (உலகம்) பெருக்கு சுருக்கு! நாட்டுக்கான புன்செய்த் தோட்டந்தொடியில் பெறும் நவதானியங்களைப் பெருக்குங்கள்! வீட்டுக்கான பொம்ம னாட்டிகளால் பெறும் பிள்ளை விவசாயத்தைச் சுருக்குங்கள்! 225