பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசு முன் செல்லாது: தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி - குதம்பாய் காசுமுன் செல்லாதடி ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்குப் பின்னாலே - குதம்பாய் காசுக்குப் பின்னாலே! காட்சியான பணம் கைவிட்டுப் போனபின் சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய் சாட்சி கோர்ட்டு ஏறாதடி! பைபையாய்ப் பொன்கொண்டோர் பொய் பொய்யாய்ச் சொன்னாலும் பொய் மெய்யாய்ப்போகுமடி - குதம்பாய் பொய் மெய்யாய் ஆகுமடி! நல்லவ ரானாலும் இல்லாதவர் தம்மை நாடு மதிக்காது - குதம்பாய் நாடு மதிக்காது! - கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப் பணமடியே - குதம்பாய் வெள்ளிப் பணமடியே! (தேசம்) - பராசக்தி 250