பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் வாயை மெல்லாதீர்! சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க - சொல்லிச் சும்மாசும்மா வெறும்வாயை மெல்லாதீங்க - நீங்க மதம் ஜாதி பேதம் மனசை விட்டு நீங்கலே - காந்தி மகான் சொன்ன வார்த்தை போலே மக்கள் இன்னும் நடக்கலே. குடிக்கத் தண்ணீரில்லாது பெரும் கூட்டம் தவியாத் தவிக்குது - சிறு கும்பல் மட்டும் ஆரஞ்சுப் பழ ஜூசு குடிக்குது. அடுக்கு மாடி மீது சிலது படுத்துத் தூங்குது - பல ஆயிரக் கணக்கான மக்கள் பாயில்லாமல் ஏங்குது. ஊத்துக் கிணறு வெட்டச் சொல்லி உதவி செஞ்சாங்க - பண உதவி செஞ்சாங்க - அதில் ஏத்தம் இறைக்கு தான்னு யாரும் பாக்க வல்லீங்க சோத்துப் பஞ்சம் துணிப் பஞ்சம் சுத்தமாக நீங்கலே - இதில் சுதந்திரம் சுகம் தருமென் றால் யாரு நம்புவாங்க? 16 (மெல்) (சுதந்) (சுதந்) (சுதந்) (சுதந்) (சுதந்) - மனமகள்