பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தந்தை பெரியார், தளபதி அண்ணா சிந்தனைத் தேனைச் செந்தமிழ் நாட்டில் எழுத்தால் பேச்சால் இனிதுற விளம்பிப் பழுத்த அரசியல் பான்மையில் விளங்கி உடுமலை யார்தம் உயர்வினை உலகுக்கு எடுத்துக் காட்டவோர் எழில்மணி மண்டபம் உடுமலை நகரில் ஒளிரச் செய்தே நெடும்புகழ் நெஞ்சில் நிலைக்க நிறுத்தி முத்துப் போல இம்முத்தமிழ்க் கவிதைப் புத்தகம் வெளியிடும் முத்தமிழ் அறிஞ! மாநிலம் போற்றும் மாண்பமை முதல்வ! நானிலம் வாழ்ந்திட நலமுடன் வாழி!