பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருமிகு கே.சி. பழனிசாமி அவர்கள் பொன்வயல் சூழ்ந்த பொருநைக் கரையூர் தொன்மை மிகுந்த சோழர் பேரூர் கருவூர் இன்றது கரூரென் றானது திருமிகு பெருந்தகை பழனி சாமி இவ்வூர்க் காரர் இனியபண் பாளர் எவ்வூர் தானும் தம்மூர் என்பவர் பாடும் பைந்தமிழ்ப் பாவலர் தம்மால் பாடல் பெற்ற பழனிக் கோயில் அறங்கா வற்குழு அரும்பணித் தலைவர் அறக்கொடைச் செல்வர் அருந்தமிழ் ஆர்வலர் நடுவு நிலைதவழ் நனிநா கரிகர் உடுமலை நாரா யணகவி ராயர் அறக்கட் டளையினை அணிசெயும் புரவலர் உறுபொருள் அளித்தும் உள்ளம் களித்தும் இந்நூல் வெளிவர ஏற்பன செய்தும் நன்னூல் இதனை நமக்குத் தந்தவர் அள்ளக் குறையா அமுதை வழங்கிய வள்ளல் பெருமகன் வாழிய நீடு!