பக்கம்:உணர்வின் எல்லை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்—பாரதியும்

41

பாரதியார் கலைமகளை மறந்து வாளாவிருந்தார். எத்துணை நாள்தான் தாயைப் பிரிந்த கன்று தனியாக பாரதியும்
பாரதியும்
இருக்க இயலும்? தாயின் ஞாபகம் தானகவே தோன்றுகின்றது. ஏக்கம் பிடிக்கின்றது; கத்தவும் ஆரம்பிக்கின்றது. தாயின் செவியில் கன்று கத்தும் குரல் சென்று தாக்குகிறது. தாயின் உள்ளம் தணலிடை மெழுகென உருகியது. கன்று இருக்கும் இடத்தை நோக்கித் தாயின் கால்கள் நடந்தன. தாயும் கன்றும் ஒன்று சேர்ந்தன. தாய்ப்பசு கன்றைத் தன் நாவால் நக்குகிறது; கன்றாே, தாயைச் சற்றுக் கோபத்துடன் பார்க்கிறது; ‘என்னை விட்டு ஏன் பிரிந்தாய்?’ என்று கேட்பது போல இருக்கின்றது அதன் பார்வை. பிரிந்தது தன் குற்றம் என்பதைக் கன்று உணரவில்லை. எனினும், தாய் பிரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறது. இப்படித்தான் பாரதியாரும்! பாரதியாரது ‘ஸரஸ்வதி ஸ்தோத்திரம்’ என்ற செய்யுட் பகுதியில் இக்கருத்துக்கள் காணப்படுகின்றன. அன்னையை மறந்தேன் என்பதை,

‘மாயையி லறிவிழந்தே–உம்மை
        மதிப்பது மறந்தன பிழைகளெல்லாம்’

என்று கூறுமுகமாகப் புலப்படுத்துகின்றர். மறந்தது தம் குற்றமாயினும், கவிஞர்,

‘எங்கனம் சென்றிருந்தீர்—என
        தின்னுயி ரே!என்றன் இசையமுதே!’