பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆罗 லா. ச. ராமாமிருதம் 'நெருப்பு என்றால் வாய் வெந்து போக வேண்டும்" வெறும் அடுக்குத் தொடர் மட்டில் நான் கூறும் சொல் ஆகாது. அது கொஞ்சநாழியின் கிச்சுக் கிச்சு. அத்தோடு சரி. சொற்களின் மூலம் அமைதி-எளிய முறையில், நேருக்கு நேர்-கழைக் கத்தாடித்தனம் ஒன்றுமிலாது, நாணயம் மட்டும் தூக்கி நின்று, இரைச்சல் அனைத்தும் அடங்கி, சொல்லின் அதிகாரம் (அதட்டல் அல்ல) மட்டும் மிஞ்சி, எழுத்து இதை அடைய முடிந்ததெனில் இதனினும் பேறு. உண்டோ? பொருளுக்கு முடிவில்லை. ஒசைக்கு முடிவில்லை. இவைகளை மொழிபெயர்த்துக் கொண்டேயிருக்கும் சொல் லுக்கும் முடிவில்லை. வாழ்க்கையின் லக்ஷயமாக மோனம் கூட ஒரு சொல்தான். மகத்தான சொல். யாவற்றிற்கும் ஒரே சொல். சிவம்: சுந்தரம்! சத்யம்! லசிதான ய்யா. இந்த சக்கர வட்டமெல்லாம் இருக்கட்டும் படைப்பு முறைமையில் சொற்கள் எப்படி வருகின்றன: நேருக்கு நேர் பதில்: என்று கேட்டால், உயிரின் மர்மம்போல்தான் சொல்லும், என் பதில் தெரியாது. ஒம்: [தஞ்சைப் பல்கலைக் கழகம் நடத்திய "இலக்கியப் பட்டறை'யில் நிகழ்த்திய உரை!