பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந சிதம்பர சுப்பிரமணியம் 芷恩演 ஆயினும், ஐயர் வந்து பார்க்கும்படி மாடியில் யார்? போகப் போகத் தெரியவந்தது. ஐயர்வாள் தமிழில் எப்படியோ, மாடியில் இருப்பவர் ஸம்ஸ்கிருதத்தில் அத்தனை புலமை. பெரியவர்கள் பெரிய தடத்தில், மாடியில் பரிமாறிக்கொள்கிறார்கள் என்பது தவிர என்னால் வேறு என்ன யூஹிக்க முடியும் வேறு என்னதான் எனக்குத் தகுதி: மாடியில், தாத்தாவும் பாட்டியும் தவிர யாருமில்லை. ஒரே பையன் சிம்லாவில் பெரிய உத்யோகம். பிறகு, பையனுக்குத் தென்னாட்டுக்கு மாற்றலால் விட்டதோ, அல்லது பெற்றோர்களைத் தன்னிடமே வரவழைத்துக் கொண்டுவிட்டானோ, அவர்கள் பெயர்ந்து விட்டார்கள் , நான் எஸ்.எஸ்.எல்.சி தேறி, வேலை தேடும் மும்முரத்தில் இறங்கினேன். அடுத்து மாடிக்கு ஒரு ஸங்கீத வித்வான் வந்தார். பிரபலமானவராகத் தெரியவில்லை. ஆனால் அவருக்கும் வயதாகவில்லை. சதா, மாடியில், தம்பூர், ஹார்மோனியம். அவர் சாதகமும்தான். சில சமயங்களில், பக்கவாத்தியங் களுடன் கச்சேரியும் நடைபெறும் கஞ்சீராவும், கிருதங் கமும், அவைகளின் தனி கோதாவும், தாளத்தில் தொ.ை தட்டலும் மாடி அதிரும். சித்தப்பாவுக்கு எரிச்சலாய் வரும் குழந்தைகளுக்கும் படிப்புக் கெடுகின்றது. தவிர, அவர் எண்ணத்தில் லங்கீதம் சோம்பேறிப் பிழைப்பு. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. மாதம் ஒரிருமுறை, மாலைவேளை மாடியிலிருந்து ஒரு சின்ன ஊர்வலம் கிளம்பும். முன்னால் தம்பூரா, அடுத்து வித்வான், அவர் பின்னால் ஒரு சின்னப் பரிவாரம்.