பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 శశీ! !. எனக்காக பாபு, நான் மறக்கவில்லை. நேரம்தான் கூட. ஆனால் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஆறாக ஓடினாலும் அள்ளும் போது, அள்ளும்வரைதான் அள்ள முடியும். அண்டாவில் மொண்டு வைத்துக்கொள்ள முடியாது. இங்கு கைதான் பாத்திரம். நீ கேட்டது. அப்படி விஷயம். உனக்காகவே நீ கேட்டாலும், முன்னால் என்னில் ஊறாமல் உனக்கு எப்படிப் பங்காகும்? ஆகவே அது எனக்கும்தான் என்பது இன்றியமையாதது. வெய்யில் உச்சிக்கு ஏறிவிட்டது. ஆனால் உள்ளங் காலில் சூடு ஏறவில்லை திரும்பி இரண்டு மாதங்களாகியும், வால்பாறைக் குளிர் என்னை முற்றிலும் விட்டபாடில்லை. எப்படியோ ஒரு கழைக்கோடி பனி உள் இறங்கி உள் ஊற்றம் கண்டுவிட்டது! சாய்வு நாற்காலியை இழுத்து வந்து வெளியே போட்டு உட்கார்ந்து, மேடைமீது காலையும் நீட்டிவிட்டேன். வீட்டைச் சுற்றி முள்வேலி, உள், புழங்கத் தாராளமான இடம் சிமிட்டி மேடை வேறு (நடுவில் பாளம் வெடித்து). கிராதி gate இன் இருமருங்கிலும் கட்டிய துண்களைத் தம்