பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உண்மையின் தரிசனம் கெல்லை அரைத்தாயிற்று. கூடத்தில் கொட்டி அளந்து கொண்டிருக்கிறான். அரிசிக்குள் கையைவிட்டு எடுக்கிறேன். உடம்புச் சூடே போலும் கணகணப்பு, பூமியின் கர்ப்பத் இனின்று வந்ததல்லவா? அன்னபூர்ணே நம: சிவனே அவளிடம் கையேந்தி நிற்கிறான். அவளும் இடுகிறாள். பாவனைகளின் அழகை ரசிக்க இதுவே உகந்த முதற்பாடம். பாவனை என்பது என்ன? சாதக விசேஷத்தால் எண்ணத்தின் உருவத்தை உருவக காக்கி, அதனுள் மிளிரும் நோக்கத்தின் அழகைக் கண்டு இன்புறல்தானே! "மாமா, கலத்துக்குப் பதினாறு படி தேறியிருக்கு. இடிசல்கூட அதிகமில்லை." இந்தப் பாஷையே மறந்துபோகுமளவுக்கு அத்தனை வருடங்ளாகிவிட்டன. ஆனால் புரிந்தமாதிரி தலை ஆட்டு கிறேன். சந்தானத்தின் சந்தோஷத்தைக் கெடுக்க மன மில்லை.