பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையின் தரிசனம் 2 மறுபடியும் விழிப்பு நேர்ந்தபோது நன்றாய் விடிந்திருந்தது. பல் விளக்கக் கிணற்றடிக்குப் போனபோது சந்தானம் மாட்டுக்குப் பிண்ணாக்குக் கரைத்துக்கொண்டிருந்தான். "'என்னப்பா நடுராத்திரியில் அத்தனை அவசரமாம் Ġu_3rrĞggr?** 'அந்த மாமா வீட்டுப் பசுவுக்குப் பிரசவம். ரொம்ப சிரமப்பட்டுப் போச்சு பனிக்குடம் உடைஞ்சு, சிசுவும் வெளிப்பட்டுடுத்து, வலி தாங்காமல் தாய் எழுந்து நின்னுடுத்து நின்னபடியே, கன்றுக்குட்டியைக் கையில் ஏந்தியபடியே வாங்கும்படி ஆயிடுத்து மாடு கிழம் வேறே’’ உயிரின் தரிசனத்துக்காக கிளம்பிவிட்டாயே! பார் . உண்மையின் தரிசனத்தையே பார்.